நேற்று பெங்களூரில் விஸ்வரூபம் படம் பார்த்தேன். கமல்ஹாசனின் பரிணாம வளர்ச்சி நன்கு தெரிகிறது. கமல்ஹாசனின் 50 வருட திரையுலக விழாவின் போதும் , விஸ்வரூபம் ஆரம்பத்தில் இயக்குனர் செல்வராகவன் விலகிய போதும் கமல் சொன்னதன் அர்த்தம் இப்பொழுது எனக்கு புரிகிறது. 'எனக்கு நிறைய நேரம் இல்லை' என்று பொருள்பட சொன்னார். ஒரு உன்னதமான உண்மையான கலைஞன், எப்பொழுதும் தன் படைப்பை மட்டுமே சிந்திக்கும் ஒருவன் தான் கடந்து போகும் பாதையை முன்பே உணர்ந்திருப்பான் என்பது கமல் மூலம் தெளிவாகிறது. கமலின் 'ஹே ராம்' படம் ஒரு மைல் கல் என்றல் விஸ்வரூபம் அதை பல மடங்கு நகர்த்தி செல்கிறது. இது 'மிஷன் இம்ப்பாசிபில்' என்ற ஆங்கில படங்கள் போன்று ஒரு 'பன்னாட்டு உளவு' சம்பந்தப்பட்ட கதை என்றல் அது தவறு என்பேன். இதில் போரினால் வன்முறையால் எவ்வளவு இழப்பை சந்திக்கிறோம், எப்படி கல்வி கற்க முடியாமல் போகிறது, எவ்வாறு சிறுவர்கள் அழிக்கப்படுகிறார்கள், பெண்கள் அடிமைகளாய் ஆகிறார்கள் என்றெல்லாம் கோடிட்டு காண்பிக்கப்படுகிறது. உன்னுடைய ஆக்ரோஷம் மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதற்கு இரையாகிவிடும். அன்பு மிகுதியானால் உன்னை சுற்றி உள்ள எல்லாமே அதன் முழு சக்தியுடன் இயங்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக