இந்த படம் பார்பவர்களை நீண்ட நாள் யோசிக்க வைக்கும். வாழ்க்கையில் எப்படி நாம் ஒரு கருத்தை பிடித்துக்கொண்டு அதிலிருந்து மாற மறுக்கிறோம் என்று புரியும்.
"நான் ரொம்ப நேர்மையானவன், உண்மை எதுவோ அதை மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்வேன்" என்று பெருமையுடன் சொல்பவர்கள் இருக்கிறார்கள்
இப்படி சிறு வயதில் தான் பெருமையாக நினைத்ததை வயதனாலும் அது தான் தன் குணம் என்று கருதி பல சமயங்களில் இடம், பொருள் அறியாமல், மற்றவர்களின் மனம் நோகச் செய்வார்கள். அதனால் மற்றவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றாலும் அவர்களுக்கு அந்த முட்டாள்தனமான தன்னை பற்றிய ஒரு கருத்தே முக்கியமாக படும்.
இந்த படத்தில் காந்தி தான் நாடு இரண்டவதர்க்கும், தன் காதல் மனைவி இறப்பதற்கும் காரணம் என்று அவரை கொலை செய்ய புறப்படும் கமலஹாசன், இறுதியில், தன்னுடைய முட்டாள் தனத்தை சம்பவங்களின் தொடர்ச்சியாக உணர்வதாக இருக்கிறது.
சம்பவங்களின் பாதிப்பாலும் மாறாமல் தன் கருத்தே முக்கியம் என்று இருப்பவர்கள் எவ்வளவு வாழ்க்கை அனுபவங்களை உதாசீனப்படுதுகிரர்கள் என்று தெரியும். இது அவர்களை வாழ்க்கை பாடத்தை கற்று கொள்ள இயலாமல் ஆகி விடும்.
வாழ்க்கை என்பதே மாற்றம் உடையது தான். இதில் நான் பிறந்ததில் இருந்தே இப்படித்தான் என்பவர்கள் தன்னை தானே ஏமாற்றி கொள்வது மட்டுமில்லாமல் வாழ்க்கை தத்துவத்தை உணராமலே சென்று விடுகிறார்கள்.
செவ்வாய், 28 டிசம்பர், 2010
இன்று நீ பார்த்த பார்வை பாடலை வலை தல்லத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். இது ஹே ராம் என்ற கமல் ஹாசன் படத்தில் வரும் ஒரு பாடல். எனக்கு இந்த படம் தமிழில் மிகவும் பிடித்த ஒரு படம். கல்கியின் "அலை ஓசை" படித்தால் சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு தஞ்சாவூர் கிராமமோ திருநெல்வேலி ஆக்ராஹாரமோ எப்படி இருந்தது என்று தெரிய வரும். அதன் பாதிப்பு இந்த படத்தில் வரும் வாலி மற்றும் ஹேமா மாலினி வரும் அய்யங்கார் குடும்பம் வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த படம் தமிழில் நிச்சியமாய் ஒரு பரிட்சார்த்த முயற்சி என்று சொல்ல வேண்டும். ஒரே நெருடல் என்ன வென்றால், இதிலும் ஒரு சாதாரண மனிதனின் பார்வை என்றில்லாமல் கமலின் ஹீரோயிசம் என்று சற்று தெரிவது தான். மற்றபடி இது தமிழில் கமல் நடித்த எடுத்த முத்து என்றே சொல்ல வேண்டும்.
நீ பார்த்த பார்வை எனக்கு பிடித்த ஒரு பாடல். அதில் வரும் பியானோ இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் பல முறை முயற்சி செய்து கூட பார்த்திருக்கிறேன்.
நீ பார்த்த பார்வை எனக்கு பிடித்த ஒரு பாடல். அதில் வரும் பியானோ இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் பல முறை முயற்சி செய்து கூட பார்த்திருக்கிறேன்.
சனி, 28 ஆகஸ்ட், 2010
மனது வலிக்கிறது!
இந்த வார குமுதத்தில் ஒரு செய்தி. ஒரு தாய் வறுமையின் காரணமாக தன் இரு மகன்களுடன் தண்டவாளத்தில் தலை வைத்து இறந்து போனாள். அவளுடைய மகன்கள் இருவரும் உயிர் தப்பி விட்டனர். மூத்த மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போலிசை அழைத்து வந்து பார்க்கையில் இளையவன் எப்போதும் தன் தாய் அருகிலேயே இருப்பவன், அந்த இறந்த தாயின் அருகிலேயே படுத்திருந்தான். மனது வலிக்கிறது.
எந்த மாதிரி உலகத்தை நாம் உருவாக்கி வருகிறோம்? இந்த உலகத்தில் சாமர்த்திய காரர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளதா? இன்று நான் சமர்தியசாலியாக ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். நாளை என்னால் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்போது போல் இயங்க முடியவில்லை என்றால் இச்சமூகம் என்னை நிராகரித்து விடுமா? அப்படியானால் நான் காலம் முழுமைக்கும் வல்லவனாக இருக்க வேண்டுமா? உலகத்தில் எல்லோரும் இப்படி rat race-இல் இருப்பதால் எவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனக்கு இருப்பது போதும் என்ற மன நிலை எவருக்கும் இருப்பதில்லை. எல்லாமே, உலகமயமாக்கல் என்ற பெரும் சன்தையினால் மாய வலையினால் மனிதனுடைய வாழ்தலை தொலைத்தாகிவிட்டது. அப்படிப்பட்ட உலகத்தில் ஒரு பெண் வறுமையினால் இறந்து போவது ஒரு நிகழ்வா? அதைப்பற்றி பேசுவது தான் மெச்சத்தக்க செயலா? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற மாபெரும் சொல் எப்பொழுது வயப்படும்?
நான் வேலை பார்க்கும் அமெரிக்க கம்பெனியில் கிறிஸ்துமசின் போது வேலை பார்பவர்களை தொடர்ந்து 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்புவது வாடிக்கை. அப்பொழுது மனதில் ஒரு வித நிம்மதி பரவும். இது மற்ற விடுமுறை நாட்களில் கிடைக்காதது. இதற்க்கு காரணம், நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அது மற்றவர்களால் தான் முடியும். உங்களை தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை என்றால் அதை விட சுதந்திரம் வேறு என்ன இருக்க முடியும்?
எந்த மாதிரி உலகத்தை நாம் உருவாக்கி வருகிறோம்? இந்த உலகத்தில் சாமர்த்திய காரர்களுக்கு மட்டும் தான் இடம் உள்ளதா? இன்று நான் சமர்தியசாலியாக ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். நாளை என்னால் ஏதோ ஒரு காரணத்திற்காக இப்போது போல் இயங்க முடியவில்லை என்றால் இச்சமூகம் என்னை நிராகரித்து விடுமா? அப்படியானால் நான் காலம் முழுமைக்கும் வல்லவனாக இருக்க வேண்டுமா? உலகத்தில் எல்லோரும் இப்படி rat race-இல் இருப்பதால் எவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனக்கு இருப்பது போதும் என்ற மன நிலை எவருக்கும் இருப்பதில்லை. எல்லாமே, உலகமயமாக்கல் என்ற பெரும் சன்தையினால் மாய வலையினால் மனிதனுடைய வாழ்தலை தொலைத்தாகிவிட்டது. அப்படிப்பட்ட உலகத்தில் ஒரு பெண் வறுமையினால் இறந்து போவது ஒரு நிகழ்வா? அதைப்பற்றி பேசுவது தான் மெச்சத்தக்க செயலா? தனி மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற மாபெரும் சொல் எப்பொழுது வயப்படும்?
நான் வேலை பார்க்கும் அமெரிக்க கம்பெனியில் கிறிஸ்துமசின் போது வேலை பார்பவர்களை தொடர்ந்து 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்புவது வாடிக்கை. அப்பொழுது மனதில் ஒரு வித நிம்மதி பரவும். இது மற்ற விடுமுறை நாட்களில் கிடைக்காதது. இதற்க்கு காரணம், நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் அது மற்றவர்களால் தான் முடியும். உங்களை தொந்தரவு செய்வதற்கு யாருமே இல்லை என்றால் அதை விட சுதந்திரம் வேறு என்ன இருக்க முடியும்?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)