செவ்வாய், 28 டிசம்பர், 2010

இன்று நீ பார்த்த பார்வை பாடலை வலை தல்லத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். இது ஹே ராம் என்ற கமல் ஹாசன் படத்தில் வரும் ஒரு பாடல். எனக்கு இந்த படம் தமிழில் மிகவும் பிடித்த ஒரு படம். கல்கியின் "அலை ஓசை" படித்தால் சுதந்திரம் பெற்ற காலத்தில் ஒரு தஞ்சாவூர் கிராமமோ திருநெல்வேலி ஆக்ராஹாரமோ எப்படி இருந்தது என்று தெரிய வரும். அதன் பாதிப்பு இந்த படத்தில் வரும் வாலி மற்றும் ஹேமா மாலினி வரும் அய்யங்கார் குடும்பம் வெளிச்சம் போட்டுக் காட்டும். இந்த படம் தமிழில் நிச்சியமாய் ஒரு பரிட்சார்த்த முயற்சி என்று சொல்ல வேண்டும். ஒரே நெருடல் என்ன வென்றால், இதிலும் ஒரு சாதாரண மனிதனின் பார்வை என்றில்லாமல் கமலின் ஹீரோயிசம் என்று சற்று தெரிவது தான். மற்றபடி இது தமிழில் கமல் நடித்த எடுத்த முத்து என்றே சொல்ல வேண்டும்.
நீ பார்த்த பார்வை எனக்கு பிடித்த ஒரு பாடல். அதில் வரும் பியானோ இசை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் பல முறை முயற்சி செய்து கூட பார்த்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: